மீண்டும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் பெய்த மழை இன்று காலை வரை தொடர் மழையாக பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி அனைத்தும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறபித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் மாவட்டம் முழுவதும் தொடர் மழையாக நேற்று இரவு முதல் பெய்து வருகிறது.

இதற்கிடையே கழிவுநீர் செல்லும் சாக்கடைகளை நகராட்சி நிர்வாகம் முறையாக சுத்திகரிப்பு செய்யப்படவில்லை. இதனால் கரூர் ஆசாத் ரோடு, காந்திகிராமம், ஜவகர் பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை எங்கும் கழிவுநீரால் மழைநீரால் துர்நாற்றம் வீசுகிறது.

இதன் காரணமாக் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தொடர் மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கு சென்ற மாணவர்கள் விடுமுறை அளித்ததன் காரணமாக வீடு திரும்பினர். கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பெய்த மொத்த மழை அளவாக 448. 50 மிமீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.