மக்கள் கவனத்திற்கு..வங்கி காசோலைகள் செல்லாது !

இன்று முதல் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கிகளின் பழைய காசோலைப் புத்தகங்கள் மற்றும் எம்ஐசிஆர் (MICR) குறியீடுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை புதிப்பிக்க படாவிட்டால் வங்கிகளில் வழங்கப்படும் கடன்கள் ரத்து செய்யப்படும். எனவே வாடிக்கையாளர்கள் பழைய காசோலைப் புத்தகத்தை புதுப்பிக்கப்பட்டு பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஐஎப்எஸ்சி மற்றும் எம் ஐ சி ஆர் உடன் கூடிய காசோலை புத்தகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வாடிக்கையாளர் வங்கி கிளையை அனுகலாம்” எனத் தெரிவித்துள்ளது. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கி ஆகிய வங்கிகள் அண்மையில் பஞ்சாப் நேசனல் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது.