சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி போட்டுக்கொண்டார் -தமிழ்நாடு !

கரோனா தொற்றுக்கு தடுப்பூசி உலகம் முழுவதும் அரசால் செலுத்தப்பட்டு வருகிறது.தற்போது திருச்சி அரசு தலைமை மருத்துமனையில் 2 ம் நாளாக தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் 5 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்துவருகிறது.

இந்த பணியில் மருத்துவர்கள்,செவியர்கள் மற்றும் சுகாதாரத்துறை நபர்கள் என அனைவரும் செயல்பட்டு வருகின்றனர்.முதல் தினமான நேற்று 91 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.இந்த தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தானும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.