ஓடும் ரயிலில் தீ பிடித்தது – கேரளா !

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் வர்கலா அருகே மங்களூர் டு மலபார் செல்லும் மலபார் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. காலை 7.47 மணிக்கு ரயிலின் சரக்கு பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயிலில் சரக்கு பெட்டியிலிருந்து புகை எழுவதை உணர்ந்த பயணிகள் உடனடியாக, ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.தகவல் அறிந்து வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும், ரயிலின் சரக்குப்பெட்டியை மட்டும் தனியாக கழற்றி விட்டு பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.