திமுக கட்சியில் இணையும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் !

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டிடுவார் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில் உடல்நிலை குறித்து அரசியலில் இருந்து விலக போவதாக அறிவித்தார்.மேலும் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்று காத்துக் கிடந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில், தேனி மாவட்ட செயலாளர் ஆர்.கணேசன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

இவர்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து, ரஜினியின் அரசியல் பிரவேசத்திலும் உடனிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.