பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய ரயில் சேவைகள் !

சென்னை சென்ட்ரலில் இருந்து குஜராத் மாநிலம் கேவதியாவுக்கு இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரயிலை பிரமதா் நரேந்திர மோடி காணொலியில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைத்தார்.

சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 8 புதிய ரயில்களை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.லிபர்ட்டி சிலையை விட, சுற்றுலா பயணிகள் ஒற்றுமை சிலைக்கு அதிகம் வருகிறார்கள். இப்போது ரயில் சேவையின் வருகை சுற்றுலா பயணிகளுக்கு உதவும் என்று பிரதமர் மோடி கூறினார்.