தமிழக மக்கள் கவனத்திற்கு..யாருக்கு ரேஷன் கிடையாது !

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு அறிவித்து வருகிறது.இந்நிலையில்,ரேஷன் பொருட்கள் குறித்த வதந்தி பல சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது.அதில், அரசு ஊழியர்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் ரேஷன் பொருட்கள் கிடையாது என்று பரவியது.

மேலும் ஆண்டு வருமானம் அதிகம் பெருவோருக்கு ரேசனில் அரிசி இல்லை என்று செய்தி பரவியது.

இது போன்ற தகவலை நம்ப வேண்டாம் என்று அரசு தெரிவித்துள்ளது.மேலும் தற்போது அரிசி பெற்று வரும் அனைத்துக் குடும்ப அட்டைதார்களும் இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பெற்று வரும் அனைத்துப் பொருட்களையும் தொடர்ந்து பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி !