மெட்ரோ ரயில் சேவைகள் நீட்டிப்பு !

தமிழகத்தில் பண்டிகை காலங்கள் வரிசை கட்டிக்கொண்டு நிற்கின்றன.இந்த மாதம் 14-ம் தேதி ஆயுத பூஜை, 15-ம் தேதி விஜயதசமி விடுமுறை நாட்களாகும். மேலும் வரும் 16-ம் தேதியும், 17-ம் தேதியும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாகும்.

இந்த தொடர் விடுமுறை காரணமாக மக்கள் சொந்த ஊருக்கு செல்ல பயணப்படுவர்.மேலும் தீபாவளி பண்டிகை கொண்டாட மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் அதற்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் மெட்ரோ ரயில் சேவை இன்றிரவு 12 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.10 மணி முதல் 12 மணி வரை 15 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக மக்கள் பயணிப்பதை ஒட்டி இந்த சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தனிமனித இடைவெளியை கடைக்குப்பிடிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிலையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : தமிழக மக்கள் கவனத்திற்கு..யாருக்கு ரேஷன் கிடையாது !