இனி தாம்பரம் மாநகராட்சி !

தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் மொத்தம் 15 மாநகராட்சிகள் உள்ளன.

நடைபெற்ற சட்டப்பேரவையில் தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.மேலும் அதன் அருகில் இருக்கும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் அதனுடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது தமிழக அரசு தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்காக தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிகளை இணைக்க ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும் தாம்பரம் மாநகராட்சியின் பரப்பளவு 87.64 ச.கி.மீ, மக்கள்தொகை 9,60,887 ஆக மாறியுள்ளது.