நிவர் புயல் சேத விவரங்கள் வெளியீடு

நிவர் புயல் சேத விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நிவர் புயலால் மாவட்டங்களில் 562 கி.மீ தூர சாலைகள் சேதமடைந்துள்ளன. முதல்கட்ட கணக்கீட்டின்படி 8 ஆயிரத்து 670 ஹெக்டேர் விவசாய பயிர்கள் நிவர் புயல் காரணமாக சேதமடைந்துள்ளன.

மேலும், தொடக்க மதிப்பீட்டின்படி வேலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 2 ஆயிரத்து 3.57 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.