தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக அறிவித்துவருகிறது.தற்போது கோவில்களில் மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை முதல் தொடங்கி வைக்கிறார்.
கோவில்களில் முடி காணிக்கை செய்யும் திட்டத்திற்கு இனி கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மொட்டை போடும் ஊழியர்களுக்கு மாதம் ஊக்கத் தொகையை வழங்கும் திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கி வைக்க உள்ளதாக இந்து அறநிலையத் துறை தெரிவித்துள்ளது .
இதில் முதற்கட்டமாக 250 பேர் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு !