தமிழக ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் !

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் மே 10 முதல் தமிழக அரசு ஊரடங்கை பிறப்பித்தது.தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் , நாளை முதல் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதில்,கொரோனா பாதிப்புள்ள 11 மாவட்டங்கள்‌ தவிர்த்து, தமிழ்நாட்டின்‌ இதர 27 மாவட்டங்களில்‌ நாளை முதல் , தேநீர்க்‌ கடைகள்‌ காலை 6 மணி முதல்‌, மாலை 5 மணி வரை பார்சல்‌ முறையில்‌ மட்டும்‌ வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும்‌, பேக்கரிகள்‌,உணவகங்கள் கடைகளுக்கும்‌ அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 முதல்‌ மதியம்‌ 2 மணி வரை இவை இயங்கலாம்‌. இங்கும்‌ பார்சல்‌ முறை விற்பனை மட்டும்‌ அனுமதிக்கப்படுகிறது.இ-சேவை மையங்கள்‌ நாளை முதல்‌ இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.