பள்ளிகள் திறப்பு பற்றி எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை- அமைச்சர் அன்பில் மகேஷ்

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்பாக அமைச்சர் முக்கியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளைத் திறக்க இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

பெற்றோர் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் பள்ளிகள் திறப்பு பற்றி எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின்னரே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழக காவலர்களுக்கு நற்செய்தி..வாரத்தில் ஒரு நாள் விடுப்பு !