தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு அறிவித்துவருகிறது.மேலும் கொரோனா தொற்று இருக்கும் கடுமையான சூழலிலும் அரசு திறம்பட செயல் பட்டு வருகிறது.
தற்போது தமிழக காவல்துறையினருக்கு வார விடுமுறை, பிறந்த நாள் விடுமுறை, மிகைநேர ஊதியம் வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.காவல் ஆளிநர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்தநாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
மேலும் அவர்களது பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச் செய்தி, மாவட்ட மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக, சம்பந்தப்பட்ட ஆளிநர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
மேலும் ஓய்வு நாளன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்படல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..நகை கடன் தள்ளுபடி !