தமிழக அரசின் கரோனா நிவாரணம் அறிவிப்பு !

இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார்.முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.

இந்த கரோனா தொற்று தமிழகத்தை தாக்கி வருகிறது.கரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் கையொப்பமிட்டார் .

ரூ. 4000 நிவாரண தொகையில் முதல் தவணையாக 2000 மே மாதமே வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.வரும் 10ம் தேதி முதல் டோக்கன் தரப்பட்டு தினமும் 200 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் வீடு வீடாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.