தமிழகத்தில் இன்று மற்றும் நாளையும் பேருந்துகள் 24 மணிநேரமும் இயங்கும் !

தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 26 ஆயிரத்தை தாண்டி வருகிறது.

மேலும் நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில், இன்றும், நாளையும் 24 மணிநேரமும் பேருந்து சேவை இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வரும் திங்கள் முதல் முழு ஊரடங்கு வரவுள்ளதால் இரு தினங்களுக்கு இரவு 9 மணி வரை கடைகள், நிறுவனங்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு வரும் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.