தமிழகத்தில் இ- பட்ஜெட் தாக்கல்..அதிமுகவினர் வெளிநடப்பு !

தமிழகத்தின் 2021-22 ஆண்டிற்கான பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.இயற்றலும் ஈட்டலும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

அவை தொடங்கியவுடன் உடன் அதிமுகவினர் அவையில் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். அதற்கு இடையிலும், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரைப் புறக்கணித்து, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.