தமிழக பட்ஜெட் தாக்கல் காவல்துறைக்கு ₹8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு !

தமிழகத்தின் 2021-22 ஆண்டிற்கான பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.முதன் முறையாக காகிதம் இன்றி டிஜிட்டல் முறையில் இ- பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் தியாகராஜன் பழனிவேல்.

தமிழக காவல்துறையிலுள்ள 14,317 காலி இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.தமிழக காவல் துறையின் தரம் மீட்டெடுக்கப்படும்.

காவல்துறைக்கு ₹8,930.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கு ரூ4,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.தீயணைப்பு துறையில் உள்ளவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.