பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த சீமான்

நாம் தமிழர் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் எப்போதும் போல தனித்து போட்டியிடுகிறது. வேட்பாளர் தேர்தலில் ஆணுக்கு பெண் சமம் என்பதை உணர்த்தும் வகையில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் 50 சதவீத இடங்களை நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு ஒதுக்கி வருகிறது.

அந்த வகையில் இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 117 பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுகிறார்கள். மீதம் உள்ள 117 தொகுதிகளில் ஆண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் நாளை நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெறுகிறது. இதில் சீமான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.