பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

cbse-announces-second-semester-exam-date-for-10th-and-plus-two-students
cbse-announces-second-semester-exam-date-for-10th-and-plus-two-students

பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி தமிழகம் முழுவதும் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தை எழுத்து மூலம் தெரிவித்தனர்.

பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர் சென்ற ஆசிரியர்கள் திரும்பும் வகையில் 20-ந்தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்படுகிறது.

9 மாதமாக பூட்டப்பட்டு கிடந்த வகுப்பறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி முழுமையாக தெளிக்கவும், அனைத்து வகுப்புகளிலும் சானிடைசர் வைத்தல் போன்ற கட்டுப்பாடுகளை அரசு விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.