10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் தயார்படுத்தப்படுகிறது !

கொரோனா காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் கடந்த ஜனவரி 19ம் தேதி தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாதிரி வினாத்தாள் தயாரிக்க அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் எடுக்கப்பட உள்ளன.

முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறுகையில், அரசின் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடத்திட்டத்தில் இருந்து தான் பொதுத்தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் என தெரிவித்து இருந்தார்.