லாலு பிரசாத் உடல்நிலை கடும் பாதிப்பு !

பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ்,கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.மேலும் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால், ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் நுரையீரலில் இருந்த தொற்று காரணமாக நேற்று முதல் அதில் நீர் கட்டத் தொடங்கியுள்ளது. இதனால், அவரது முகம் வீங்கி, சிறுநீரகமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக லாலு, இன்று விமான ஆம்புலன்ஸ் மூலமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட உள்ளார்.

இவரை டெல்லிக்கு அனுப்ப, சிறை அதிகாரிகளும் சிபிஐ நீதிமன்றத்திடம் ஒப்புதல் பெற வேண்டும்.இதற்கிடையே நேற்று லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி, மகன்கள் தேஜ் பிரதாப் மற்றும் தேஜஷ்வி ஆகியோர் சிறப்புத் விமானத்தில் ராஞ்சியை அடைந்துள்ளனர்.