பிரேசில் அதிபர் பொல்சனாரோ பிரதமர் மோடிக்கு நன்றி கூறியுள்ளார் !

இந்திய பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சனாரோ 20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைத்ததற்காக நன்றி தெரிவித்துள்ளார்.கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இதுவரை 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவின் தடுப்பூசியை கேட்டு விண்ணப்பித்துள்ளன.

அவர் ட்விட்டரில் கூறிருப்பது ,சர்வதேச அளவில் கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியை தீர்க்கும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஒரு நண்பர் எனக்கு கிடைத்ததில் நான் பெருமைப்படுகிறேன்.

கொரோனாவை எதிர்த்து போராடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்தியா போன்ற நாட்டின் நட்பு கிடைத்துள்ளதும் பெருமையாக உள்ளது. பிரேசிலுக்கு தடுப்பூசியை அனுப்பி வைத்ததற்கு நான் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் அவர் தன்னுடைய இந்த ட்வீட்டில் லட்சுமணனுக்காக அனுமன் சஞ்சீவினி மலையை கொண்டு செல்லும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.