ஏழைகளுக்கு இலவச வீடு கட்டி தருவது உறுதி- முதலமைச்சர் எடப்பாடி

இலவச வீடு திட்டத்திற்கு எத்தனை கோடி செலவானாலும் ஏழைகளுக்கு வீடு கட்டி தருவது உறுதி என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மேலும் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஆட்சியையும் கட்சியையும் கலைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயன்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அது ஈடேறாததால் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் ஆவேசமாக கூறினார்.

போத்தனூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜமாத்தார்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர், அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் வீடு இல்லாத ஏழைகள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் வீடு கட்டிகொடுக்கப்படும் என்றார்.