தடுப்பூசி அனுப்பி வைத்ததற்காக மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் அதிபர்

20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைத்ததற்காக இந்திய பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சனாரோ நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அவர் தன்னுடைய ட்வீட்டில் அமிர்த சஞ்சீவினி மலையுடன் அனுமான் செல்லும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இந்தியா சொந்தமாக தயாரித்துள்ள கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இதுவரை 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவின் தடுப்பூசியை கேட்டு விண்ணப்பித்துள்ளன.