ரகளையில் ஈடுபட்ட நடிகர் விஷ்ணு விஷால் !

தமிழ் சினிமாவில் ஜீவா,வெண்ணிலா கபடி குழு,குள்ளநரி கூட்டம்,ராட்சசன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால்.இவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருகிறார்.நடிகர் விஷ்ணு விஷால் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவதாக அந்த குடியிருப்பின் செக்ரடரி, காவல்துறை கூடுதல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார்.

அவர் வசிக்கும் பிளாட்டில் அதிக சத்தமாக இசைகள் கேட்டுக்கொண்டிருந்தது.அந்த இசையைக் கேட்டு தான் நாங்கள் கண் விழித்தோம். இது குறித்து விஷ்ணு விஷாலிடம் தெரிவிக்க சென்றேன். ஆனால்,குடியிருப்பு வாசிகள் கதவை திறக்கவில்லை. இதையடுத்து, செக்யூரிட்டியிடம் கூறினேன்,ஆனால், அப்போதும் இசை நிற்கவில்லை .

இதையடுத்து, 100க்கு போன் செய்தேன். அப்போது, 3ஆவது மாடியிலிருந்து வந்த குடியிருப்பாளர், தானும் அந்த சத்தத்தால் தான் கண் விழித்ததாகவும் இந்த தொல்லை தாங்க முடியாததால், 100க்கு அழைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இதையடுத்து, அங்கு 2 காவலர்கள் வந்தார்கள்.

அவர்களுடன் நானும் மாடிக்கு சென்றேன். ஆனால், குடிபோதையில் இருந்த விஷ்ணு விஷால் தகாத வார்த்தைகளை பயன்படுத்தினார்.மேலும் அவர் சண்டை போடும் காட்சி அங்கு இருக்கும் கேமராவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.