கரோனா சிகிச்சையில் இருந்தும் மருத்துவமனையில் திருமணம் -இங்கிலாந்து !

இந்த கரோனா தொற்று அனைவரது வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா ஊரடங்கில் அதிகளவில் திருமணங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் தடைப்பட்டன.இந்த நிலையில், கொரோனா பாதிப்பிற்கு ஆளான இங்கிலாந்தைச் சேர்ந்த காதலர்கள் இருவர் மருத்துவமனையில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த எலிசபெத் கெர் மற்றும் சைமன் ஓ பிரையன் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். கரோனா தொற்றால் திருமணம் நடைபெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் ,அவர்களுக்கு கரோனா பாதிப்பிற்கு
ஆளானதோடு மிகவும் ஆபத்தான நிலையில் மில்டன் கெய்ன்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஒரே ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் மருத்துவமனையில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.கெனான் ஒரு சாட்சியாக நின்று இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். ஒரு குழுவுடன் சேர்ந்து பணியாற்றி அவர்களின் திருமணத்தை நடத்தி முடித்தோம் என தெரிவித்தார்.