திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் 3 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பேர் இன்று காலை முதல் மின்சாரம் இல்லாததால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.