திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெருவித்துள்ளார்.

திருச்சியில் பெரியார் சிலை மீது சிலர் காவி சாயத்தை பூசி அவமதித்தனர். இதற்கு பல்வேறு தரப்பிலும், அரசியல் கட்சிகள் தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை எப்போது புரிந்துக்கொள்வர்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.