மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா (APY) ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் 60 வயதிற்குப் பிறகு மாத ஓய்வூதியம் வழங்குவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்த திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) கட்டுப்படுத்தப்படுகிறது.
இது முக்கியமாக அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.7 டெபாசிட் செய்யும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 வரை ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கத் திட்டத்தில் நீங்கள் விரைவில் முதலீடு செய்யத் தொடங்கினால், அதிக நிதி உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். ஒரு நபர் தனது 18 வயதில் APY இன் சந்தாதாரராக மாறினால், அவர் 60 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 ஓய்வூதியத்தைப் பெற மாதத்திற்கு ரூ.210 அல்லது ஒவ்வொரு நாளும் ரூ.7 டெபாசிட் செய்ய வேண்டும்.