திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் வழியாகச் சுவாமி தரிசனத்திற்கு வரும் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்கான சிறப்புத் தரிசன டிக்கெட் இன்று முதல் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.வழக்கமாக வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரு தினங்கள் மட்டுமே சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானைத் தரிசிக்கப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.