விஜயகாந்தால் செய்யமுடியாததை ரஜினியால் செய்ய முடியுமா

கட்சி ஆரம்பித்து ஒரே ஆண்டில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு எட்டு விழுக்காடு வாக்குகளைப் பெற்ற விஜயகாந்த் கட்சியால் இறுதிவரை அதிமுக, திமுக இடத்தைப் பிடிக்க முடியாத நிலையில், நடிகர் ரஜினிகாந்தால் அதைச் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜயகாந்தை ஒப்பிடும் போது ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் அதிகம், மக்கள் ஈர்ப்பு அதிகம் என்று பார்த்தாலும் அதை அவரால் வாக்காக மற்ற முடியுமா என்றால் தேர்தலில் அவர் களமாடுவதைப் பொறுத்தும் மக்களின் அபிமானமும்தான் முடிவுசெய்யும்.


தேசியம், திராவிடம் கலந்து கட்சி தொடங்கிய விஜயகாந்த் சறுக்கிய நிலையில், ஆன்மிகம் என கூறும் ரஜினிகாந்த் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.