பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலைக்கு கணவன், தாய் என இரண்டு தரப்பிலும் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கியக் காரணம் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்ராவின் தாயார் விஜயா, ஹேம்நாத்தைவிட்டு பிரிந்துவருமாறு தொடர்ந்து கூறிவந்ததால் சித்ராவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
சித்ராவின் செல்போனில் உள்ள ஆதாரங்கள், குறுஞ்செய்திகள் அழிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வுசெய்ய சைபர் ஆய்வகத்திற்கு சித்ராவின் செல்போன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். ஆர்டிஓ விசாரணை முடிவடைந்து அவர்கள் அளிக்கும் இறுதி அறிக்கை முக்கியத் தகவல்களை அளிக்கும் எனக் கூறப்படுகிறது.