வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை..!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் 48 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பல கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதையே போராடும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.