5 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க திட்டம்

தமிழகம் முழுவதும் 2800 மையங்களில் தடுப்பூசியை இருப்பு வைத்து பயன்படுத்தவும், 51 மையங்களில் பதப்படுத்தி வைக்கவும் வசதிகள் உள்ளன.

உலகின் பல்வேறு நாடுகளில் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு மையத்தில் 3 இந்திய நிறுவனங்கள் தடுப்பூசி அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி விநியோக ஏற்பாட்டை உறுதி செய்ய கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.