ரயில்வே தண்டவாளங்களை முற்றுகையிட்டு போராட்டம்- விவசாயிகள் அறிவிப்பு

ரயில்வே தண்டவாளங்களை முற்றுகையிட்டு ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள மக்கள் போராட்டத்தில் இறங்குவார்கள் என்றும் விவசாயிகள் சங்கத் தலைவர் பூட்டா சிங் கூறியுள்ளார்.

விவசாயிகளின் விளைபொருட்கள் குறித்தே ஒப்பந்தம் செய்யப்படுவதாகவும், நிலம் குறித்து ஒப்பந்தம் செய்யப்படுவதில்லை என்றும் மத்திய அமைச்சர் கூறினார். இந்நிலையில், மத்திய அமைச்சரின் விளக்கத்தை ஏற்க விவசாயிகள் மறுத்துள்ளனர். 10-ம் தேதிக்குள் தங்களது கோரிக்கையை ஏற்று, வேளாண் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று பிரதமருக்கு நிபந்தனை விதித்ததாக தெரிவித்தனர்.

இதனை ஏற்காததால், ரயில்வே தண்டவாளங்களை முற்றுகையிட்டு ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள மக்கள் போராட்டத்தில் இறங்குவார்கள் என்றும் விவசாயிகள் சங்கத் தலைவர் பூட்டா சிங் கூறினார். ரயில் மறியல் போராட்டத்துக்கான தேதியை முடிவுசெய்து அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.