முன்பதிவு செய்யாமல் சபரிமலை செல்ல முடியாது

தற்போதைய சூழ்நிலையில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடியாத நிலை உள்ளது.

சபரிமலையில் பணியில் உள்ளவர்களும், கடைகள் மற்றும் ஒட்டல்களில் பணிபுரிபவர்களும் 14 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சன்னிதானம் நிர்வாக மாஜிஸ்திரேட் சத்திய பாலன் நாயர் தெரிவிக்கையில், சன்னிதானம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணி புரிபவர்கள் 14 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். இது தொடர்பாக அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.