பிப்.14ஆம் தேதி சென்னை வரும் பிரதமர்..!

தமிழகத்தில் கரோனா தொற்று ஊரடங்குக்குப்பின் முதன்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். சென்னையில் மெட்ரோ தடத்தை தொடங்கி வைக்கிறார். சென்னையில் 3 மணி நேரம் மட்டுமே தங்க உள்ளார்.

பிரதமர் மோடி தமிழகத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க முதல்வர் பழனிசாமியின் அழைப்பின்பேரில் சென்னை வருகிறார். தமிழகத்தில் கரோனா தொற்று உருவாவதற்கு முன்னர் பிரதமர் மோடி சென்னை வந்தார். அதற்கு பின்னர் கடந்த 10 மாதங்களில் பிரதமர் மோடி சென்னை வரவில்லை.

சென்னை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் அதே வேளையில் திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். சென்னை விமான நிலையம் மற்றும் திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்கும், எண்ணூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துறைமுக முனையத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.