‘டான்’ படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரி தொடங்கியது..!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டுள்ளது.

‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ படங்களைத் தொடர்ந்து, ‘டான்’ என்னும் படத்தில் நடிக்கத் தயாராகி வந்தார் சிவகார்த்திகேயன். கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளதால், உடல் எடையைக் குறைத்துத் தயாரானார். இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது.

‘டான்’ படத்தை முடித்துவிட்டு, அட்லியின் மற்றொரு உதவி இயக்குநர் இயக்கவுள்ள படத்திலும் நாயகனாக நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.