கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவான ரிஷிமூலம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனம் (WHO) முடிவு செய்தது.
இந்தநிலையில், ஆய்வினை மேற்கொண்ட பிறகு கொரோனா பரவல் குறித்து செய்தியாளர்களிடம் எடுத்துரைத்த உலக சுகாதார நிறுவனம், ‘கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்து பரவியிருப்பதற்கு வாய்ப்பில்லை.
இது விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கக் கூடிய வாய்ப்பு தான் அதிகம் உள்ளது. நாங்கள் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகள், ஏதேனும் விலங்குகளிடம், இந்த வைரஸ் (Corona Virus) உருவாகியிருக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதை உணர்த்துகிறது.” என குறிப்பிட்டது.
இது குறித்த விசாரணை மேலும் நடத்தப்பட்ட வேண்டியுள்ளது. இருப்பினும், சீனாவின் வுஹான் ஆய்வகங்களிலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கும் என்பதை ஏற்கும் வகையிலான எந்த தரவுகளும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.