பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்..!

கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள், பிரதமர் மோடிக்கும், அங்கு பணியாற்றும் இந்திய துாதரக அதிகாரிகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து விழித்துக் கொண்ட கனடா அரசு அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளது.

இதையடுத்து, சமீபத்தில், வான்கூவர் துணை துாதரகத்திற்கு வெளியே, காலிஸ்தான் ஆதரவாளரான இந்தர்ஜித் சிங் பெயின்ஸ் என்பவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு, கொலை மிரட்டல் விடுத்தார்.

நரிந்தர் சிங் கால்சா என்பவரின், ‘பேஸ்புக்’ பக்கத்தில் இருந்து, அந்த கொலை மிரட்டலுக்கான பதிவையும், இந்தர்ஜித் வெளியிட்டார். அது தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.