Father sold kid: கடனுக்காக குழந்தையை விற்ற தந்தை

father sold kid
கடனுக்காக குழந்தையை விற்ற தந்தை

Father sold kid: திருச்சி உறையூர் அருகே உள்ள காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலாம். இவர் தனது நண்பர் ஆரோக்கியராஜிடம் சூதாட்டத்திற்காக 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கொடுத்த கடனை திருப்பி தரமால் இருந்து வந்த நிலையில் அப்துல் சலாமுக்கு பிறந்த ஐந்தாவது ஆண் குழந்தையை ஆரோக்கியராஜ் பனத்திற்கு பதிலாக கேட்டுள்ளார்.

இதனை அடுத்து அப்துல் சலாம் மனைவி கைருன்னிஷாவின் மனதை மாற்றி கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக குழந்தையை வாங்கி ஆரோக்கியராஜ்க்கு 80 ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்துள்ளார்.

இந்நிலையில், தனக்கு குழந்தை வேண்டும் என்று கைருன்னிஷா ஆரோக்கியராஜை நாடி கேட்டபோது அவர் குழந்தை கொடுக்க மறுத்துள்ளார். இதனையடுத்து உறையூர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் பெற்ற மகனை 80 ஆயிரத்துக்கு விற்ற தந்தை அப்துல் சலாம், ஆரோக்கியராஜ் மற்றும் அவருடைய உறவினரான பொன்னர் மற்றும் சந்தான மூர்த்தி ஆகியோரை காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க 2 மாத ஆண் குழந்தையை விற்ற தந்தையின் செயல் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 1 – 12 வரை மீண்டும் பள்ளிகள் திறப்பு