சென்னையில் குறைந்து வரும் கொரோனா தொற்று

சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் விகிதம் படிப்படியாகக் சரிவடைந்து தற்போது 10 விழுக்காடாக குறைந்துள்ளது.

கொரோனா தொற்று குறைந்து வரும் வேளையில், கருப்பு பூஞ்சை தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 500 க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் உலிபுரத்தில் எஸ்.பி.ஐ. வங்கியில் பணியாற்றிய இளைஞர் கருப்பு பூஞ்சை பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வடசென்னையில் கொரோனா தொற்றாளர்களுக்காக ஆக்சிஜன் ஆட்டோவை தொடர்ந்து ஆக்சிஜன் இருசக்கர வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது. தனியார் அமைப்புகள் இணைந்து தொடங்கியுள்ள இந்த சேவையில், 10 வாகனங்களில் தலா 10 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆக்சிஜன் தேவைப்படுபவர்களின் வீடுகளுக்கு சென்று ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.