CBI: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளி விடுதியில் 12ஆம் வகுப்பு மாணவி, சமீபத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியை விடுதி அறைகளை சுத்தம் செய்ய அதன் வார்டன் சகாயமேரி வற்புறுத்தியதால், மன உளைச்சல் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டார். தன்னை கிறிஸ்துவ மதத்துக்கு மாற கட்டாயப்படுத்தியதாக மாணவி பேசியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டுமென மாணவியின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நீதிபதி சுவாமிநாதன் விசாரித்து வந்த நிலையில் கட்டாய மதமாற்ற முயற்சி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்து கொண்டிருக்கையில், மதமாற்றம் தொடர்பான புகார் இல்லை என இதுகுறித்து விசாரணை நடத்தி அதிகாரியும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் அறிவித்தனர், இந்த வழக்கின் இறுதி விசாரணையின் போது தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை.

எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கின் விசாரணை சரியான பாதையில் செல்லவில்லை என இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற படுகிறது என ஜனவரி 31ஆம் தேதி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டதை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பள்ளி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Vijay makkal iyakkam: விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி