எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-களில் பணம் திருட்டு !

சென்னையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் டெபாசிட் இயந்திரத்தில் லட்சக்கணக்கான ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.இதனால் டெபாசிட் ஏடிஎம்களில் பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி தடை விதித்துள்ளது.

சென்னையில் உள்ள தரமணி, வேளச்சேரி, விருகம்பாக்கம், வடபழனி, பெரியமேடு, கீழ்பாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த திருட்டு அரங்கேறியுள்ளது.

20 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இதனால் எஸ்பிஐ வங்கி, டெபாசிட் ஏடிஎம்களில் பணம் எடுக்க தற்காலிக தடை விதித்துள்ளது