தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கரோனா தொற்று !

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை கடுமையாக தாக்கி வருகிறது.தடுப்பூசி போடும் பணி ஒரு புறம் நடக்க கரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நடிகர்,நடிகைகள் மற்றும் பிரபலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்தநிலையில், தெலுங்கு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாண் அவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் தன்னை தானே தனிமை படுத்திகொண்டு, பாதுகாப்பாக இருக்கிறார். இதை கண்ட பல திரையுலக பிரபலங்களும், அவரது ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர்.