தமிழகத்தில் அரியர் தேர்வுகள் 8 வாரத்திற்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் இன்று அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இது முதுகலை படிப்பிற்கான அரியர் தேர்வு.அரியர் தேர்வுகள் ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
மேலும் அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் தமிழகத்தில் நடக்கும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.