அரசு பள்ளி 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாத்தனூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொற்று பாதித்த ஆசிரிர்கள் பாடம் நடத்திய வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது, மாணவர்கள் மற்றும் பெற்றொர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.