டீ கடைகளை திறக்க அனுமதி

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு நாளை காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய  அமலுக்கு வருகிறது. கொரோனா பரவல் குறைந்து வரும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு உள்ளிட்ட அதிகப்படியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோவிட்-19 பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகளை திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களில் டீ கடைகளை திறக்கலாம். காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்படலாம். பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது