சாலைகளில் பாதுகாப்பு பணிக்கு பெண் காவலர்கள் ஈடுபட வேண்டாம்

முதல்வர் அலுவல் ரீதியாக பயணம் செய்யும் சமயத்தில், சாலைகளில் பாதுகாப்பு பணிக்கு காவல் துறையினர் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த பணியில் ஆண் காவலர்கள் மற்றும் பெண் காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் பயணத்தின் போது சாலையோரம் பெண் காவலர்களை பாதுகாப்பு பணிக்காக நிற்க வைக்க வேண்டாம் என்று தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், “தமிழக முதல்வர் அலுவல் ரீதியாக செல்கையில் காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறார்கள்.

இவர்களில் பெண் காவல் அதிகாரிகள் இனி வரும் நாட்களில் முதல்வரின் பயணங்களின் போது சாலையோரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டாம். அவர்களை சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் சாலையோரத்தில் நிற்க வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.